சென்னை: ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்யாமல் அரசே இலவச உணவுகள் வழங்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா வந்திருப்பது மனவேதனை தருகிறது என்று தெரிவித்த அவர், சுங்க கட்டணத்தை உயர்த்தி இருப்பது மனிதநேயமற்ற செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.